அமைச்சருடன்
சந்திப்பு -24.02.2018
BSNL நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சரை இன்று சந்தித்தனர்.
BSNL ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக
அமைச்சர் கூறினார்.
DOT செயலர் DPE-ஐ அணுகி
கொடுக்கும் திறன் (affordability) என்ற நிபந்தனையில் இருந்து BSNLக்கு விலக்கு பெறவேண்டும்
என்றும், அதன் பின்
தான் அதற்கான மத்திய அமைசச்சரவையின் ஒப்புதலை பெற அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.
அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் ஊதிய மாற்றக்குழுவை DPE வழிகாட்டல்படி BSNL உடனடியாக அமைக்கும்
என்றும் அவர் உறுதியளித்தார்.
பென்ஷன் பங்களிப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு உள்ளது போலவே (கடசியாக பெறும் அடிப்படை ஊதியத்தில்) BSNL ஊழியர்களுக்கும் பென்ஷன் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அதற்காக தான் அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் : DOT செயலரிடம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறினார்.
டவர் கார்ப்பரேஷன் : தனியார் மயமாக்கவோ, பங்கு விற்பனைக்கோ அரசு முயற்சிக்காது எனறு அமைச்சர் கூறினார்.
BSNLல் பனிபுரிவோரின் ஓய்வு
பெறும் வயதை 60லிருந்து 58 ஆகக் குறைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என
அமைச்சர் தெரிவித்தார்.
தனிடவர்கம்பெனி குறித்து விவாதம்
நடைபெற்றது. ஆனால் அமைச்சர் இது குறித்து சாதகமான
கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
ஒற்றுமை காத்து
ஓரணியில் நின்று
இமைசோரா விழிப்புடன் செயலாற்றி
சாதனை படைப்போம்
No comments:
Post a Comment