NFTECHQ

Sunday 25 February 2018


ஒப்பில்லா சிறப்புடன்
ஓய்வூதியர் சங்க பொதுக்குழு

24.02.2018 அன்று ஈரோடு பெரியார் மன்றத்தில் ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் நலச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் அருமைத்தோழர்  D.மாணிக்கம் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகள் தீர்வு குறித்து பொதுச் செயலர் தோழர் S.ராஜசேகரன் விளக்கமாக எடுத்துரைத்தனர். நிதிநிலை குறித்து பொருளர் தோழர் C. ராமசாமி எடுத்துரைத்தார்.

"ஓய்வூதியர் வழிகாட்டி" என்னும் அற்புதமான பயன்மிகு தகவல்களுடன் கூடிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலை 20  ரூபாய்க்குக் கொடுத்தது சேவைச் சிந்தனையின் எடுத்துக்காட்டு.
இந்த நூல் குறித்த அறினமுக உரையை  தோழர் மாலி எடுத்துரைத்தார். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் அமைப்பின் செயலர் தோழர் சின்னசாமி நூலை வெளியிட   மூத்த தோழர் மு.வரதராஜன் பெற்றுக் கொண்டார்.

80வயதுக்கும் மேற்பட்டவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

தோழர்கள் ஜெகதீசன், ராஜமாணிக்கம், செல்கவராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர் சண்முகம்  நன்றி கூறினார்.

750 உறுப்பினர்களில் சுமார் 400 தோழர் தோழியர்கள் பங்கேற்றனர்.

சிறப்பான செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக்த் திகழும் இந்த அமைப்பு மேலும் வளரவும் செயல் சிறக்கவும் வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment