CHECK OFF
SYSTEM என்றால் என்ன?
தொழிற்சங்க அங்க்கீகாரத் தேர்தலை CHECK
OFF SYSTEM மூலம் நடத்தலாம் என்ற கருத்தை நிர்வாகம் 15.03.2018
அன்று தெரிவித்தது. இது குறிதது 30.03.2018க்குள் கருத்து தெரிவிக்குமாறு NFTE,
BSNLEU, AIBSNLEA மற்றும் SNEA அமைப்புகளிடம் கேட்டிடுந்தது.
இது குறித்து மேலும் ஒரு விளக்கத்தை 21.03.2018 அன்று
நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அது யாதெனில்
"சில மாநிலங்களிலிருந்து CHECK
OFF SYSTEM குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்காகவே இந்த
விளக்கம். ஒவ்வொரு ஊழியரும் எந்த சங்கத்துக்கு சம்பளத்தில் சந்தா பிடித்தம்
செய்யலாம் என்று எழுத்துபூர்வமாக வரையறுக்கப்பட்ட படிவத்தின் மூலமாக குறிப்பிட்ட அதிகாரியிடம்DDO-AO
(DRAWAL) அளிக்கின்றனர். இந்த அடிப்படையில் ஊழியரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு
மாதமும் சந்தா பிடித்தம் செய்யப்படுகிகிறது. ஒரு ஊழியர் ஒரு சங்கத்திற்கு மட்டுமே
சந்தா பிடித்தம் செய்ய விருப்பம் தெரிவிக்க முடியும். இந்தக் கணக்கீடுகளைச் சேகரித்து அந்தத் தகவல்களின் அடிப்படியில்
பெரும்பான்மைச் சங்கம் எது என்பது முடிவு
செய்யப்படும்"
**************************************************************************************
ஆகவே இது சொல்லும் செய்தி யாதெனில்
உறுப்பினர் சர்பார்ப்புத் தேர்தல் என்ற ஒன்று வழக்கமான முறையில் நடக்காது.
தேர்தலுக்கென்று சங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலை கிடையாது. செலவும்
கிடையாது.
பத்து நிமிடங்களில்மாவட்டத்திலுள்ள
அதிகாரி தகவலைச் சேகரித்து மின்னஞ்சல் மூலம் மாநில அலுவலத்துக்கு அனுப்பி
விடுவார்.
அதிகபட்சம் ஒருமணிநேரத்துக்குள்
மநிலத்திலிருந்து கார்ப்பரேட் அலுவலத்திற்கு தகவல் அனுப்பப்பட்டு விடும்.
இது குறித்து தலைவர்கள் விவாதித்து நல்ல
முடிவினை எடுப்பார்கள் .
No comments:
Post a Comment