NFTECHQ

Wednesday 25 April 2018


உத்தரவு
01.04.2018 முதல் 0.3 சதவிகித விலைவாசிப்படி உயர்வுக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.



விசாலினிக்கு வாழ்த்துக்கள்
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி.
11 வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.
அதுவும் 24 மணிநேரத்தில்.
தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்.
தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு இறுதி ஆண்டு மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்களுக்கு வகுப்புகளை நடத்தியவர்.
இவரது திறமையை அறிந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.
அங்கு உலக அளவிலான IOB  GM தலைமையிலான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குஅரை  மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ இரண்டு  மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.
தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.
ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது
HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.
TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.
லண்டன் உலக பதிவேடுகள் பலகலைக் கழகத்தின் தலைவர்
தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.
Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து இரண்டு நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர  குறும் படத்தை ஒளிபரப்பியது.
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா, உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில்* விசாலினியின்அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பிகௌரவப் படுத்தியபோது விசாலினிக்கு*
வயது 13 தான்.
உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு அறிவுத்திறன் 160. ஆனால் விசாலினியின் அறிவுத்திறன் 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.

இந்திய நாட்டின் தமிழ்மகள் விசாலினி இன்னும் பல உலகப் பெர்மைகள் பெற்று மிளிர்ந்திட வாழ்த்துவோம்.

Sunday 22 April 2018

தகவல்
18.4.2018 அன்று  DPE  DOT க்கு  
கடிதம் அனுப்பியுள்ளது.
நிதி  கொடுக்கும் திறன், (AFFORDABILITY)
அதற்கு விதிவிலக்கு பெறுதல் போன்ற அம்சங்கள் குறித்து மத்திய அமைச்சரவைதான்
முடிவு செய்ய வேண்டும். BSNL க்கு விதிவிலக்கு பெற மத்திய அமைச்சரவைக்குத்தான் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.


Saturday 21 April 2018


ஏப்ரல் 21
பாரதிதாசன் நினைவு தினம்


நேர்மை வளையுது

தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு
நிழலாச்சு!
வறுமைக்கு மக்கள்நலம்
பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு!

சோகச் சுழலிலே
ஏழைச் சருகுகள்
சுற்றுதடா - கண்ணீர்
கொட்டுதடா
மோசச் செயலாலே
முன்னேற்றம் கண்டோரின்
ஆசைக்கு நீதி
இரையாகுதடா - அன்பை
அதிகார வெள்ளம்கொண்டு
போகுதடா
பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா - நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா

Wednesday 18 April 2018


மாவட்டச் செயற்குழு

ஒத்திவைக்கப்பட்ட மாவட்டச் செயற்குழு 19.04.2018 அன்று நடைபெறும்.

அனைவரும் வாரீர்

Saturday 14 April 2018


ஏப்ரல் 14
அம்பேத்கர் பிறந்த தினம்
மதத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
மனிதத்தைச் சிதைக்கும்
மனிதவிலங்குகளை
ஒதுக்குவோம்.


வாழ்த்துக்கள்
அனைவருக்கும்
இனிய
சித்திரைத் திருநாள்
வாழ்த்த்க்கள்

Tuesday 10 April 2018


மாவட்டச் செயற்குழு ஒத்திவைப்பு

இன்று நடைபெறவிருந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம் தோழர் மாரிக்கண்ணு மறைவையொட்டி ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்டச் செயாலர் நேற்று (09.04.2018) மாவட்டச் செயற்குழு குறித்து நினைவூட்டியபோது

"நான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாவட்டச் செயற்குழு சிறக்க வாழ்த்துக்கள்" என தெர்வித்த தோழர் இன்று (10.04.2018) இல்லை.

"நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னூம் பெருமை படைத்தது இவ்வுலகு-" வள்ளுவர்


அஞ்சலி
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமைத்
தோழன் D.மாரிக்கண்ணு
இன்று (10.04.2018) காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தியை வருத்தத்துடன்  தெரிவிக்கிறோம்.

NFPTE அமைப்பில் E4 சங்கத்தைக் கட்டமைப்பதில் சிறந்த பணியாற்றிய தோழன். கவிந்தப்பாடி கிளையின் செயலராக பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக செயல்பட்ட தோழன்.
ஈரோடு மாவட்ட NFTE இயகத்தின்  முன்னணித் தளபதி. தற்போது மவட்டச் சங்கத்தின்  அமைப்புச் செயலர்.. உடல்ந்லக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிலிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

தோழனின் மறைவுக்கு அஞ்சலி.

அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்

Sunday 8 April 2018


தோழர் குப்தா  பிறந்த தினம்

ஏப்ரல் 8
ஏற்ற்ம் தந்த தலைவனின் 96ஆவது பிறந்த தினம்.
இன்றைக்கும்
என்றைக்கும்
அவர் காட்டிய வழிகள்
பொருத்தமானவையே.
அற்புதமான தலைவனின்
அரும்பெரும் சாதனைகளை
 நினைவில் கொள்வோம்.


மாவட்டச் செயற்குழு
நாள்  10.04.2018 செவ்வாட்க்கிழமை
காலம் காலை 10 மணி
இடம் டெலிபோன்பவன் ஈரோடு

தலைமை தோழர் பாலசுப்ரமணியன்

ஆய்படுபொருள்

அமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு  
2018- மாற்றல் கொள்கை அமலாக்கம்
ஊழியர் பிரச்னைகள்
இன்ன பிற

அனைவரும் வாரீர்

Thursday 5 April 2018


மார்ச் மாதமும் மணிமகுடம்
சபாஷ் ஈரோடு

மார்ச் 2018ல் மற்ற நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்தின் பக்கம் ஈர்க்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஊழியர்கள் சிறப்புடன் பணியாற்றியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6,33, 400 வாடிக்கையளர்கள் மற்ற நிறுவனங்களிலிருந்து விலகி BSNL நிறுவனத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இதில்  1,31,641 வாடிக்கையாளர்களை BSNL நிறுவனத்துக்குள் இணைத்து மார்ச் 2018லும் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்று  சாதனை படைத்திருக்கிறது.

இந்த அற்புதமான பணியைச் செய்திட்ட ஈரோடு மாவட்ட ஊழியர்களை வாழ்த்தி பாராட்டுகிறோம்.


வாழ்த்துக்கள்
"ஏர்செல் நிறுவனத்தில் இருந்து BSNLக்கு மாறிவரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்து 5840சிம் கார்டுகள் விற்பனை செய்து தானே முன் வந்து செயல் பட்ட தோழர்களை நமது DGM(CFA)திருTR .ஆறுமுகம் அவர்களும் DE(EXTRANL) அவர்களும் பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினர் ஊழியர்களை உற்ச்சாக படுத்திய  நமது அதிகாரிகளுக்கு நன்றிகள் பல. நற்சான்றிதழ்பெற்ற தோழர்களுக்கும் மற்றும் சான்றிதழ் பெறவில்லை என்றாலும் சிம் சேல்ஸ் பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துகள் நன்றி பாராட்டுக்கள்

***தோழர் புண்ணிய கோட்டியின் முகநூல் பதிவிலிருந்து***

பாராட்டு பெற்ற தோழர்கள்
1.P.கதிர்வேல் JE
2.R.கணேசன் JE
3.B.மோகன்ராஜ் JE
4. G.வெங்கடேசன் JE
5.A.கண்டியண்ணன் JE
6. A.பத்மனாபன் TT
7.G.சண்முகசுந்தரம் TT
8.S.ஆனந்தன் TT
9.E.V.ராஜேந்திரன் TT
10.D.தினகரன் TT
11.R.காளிமுத்து TT
12.தம்பிக்கலை யன் TT
13.M.வீரன்  ATT


பாராட்டு பெற்ற தோழர்களுக்க்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
தோழர்களுக்கு உறுதுணையாக தோள்கொடுத்து பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றும் தோழர்களுக்கும் பாராட்டுக்கள்வாழ்த்துக்கள்
வேண்டுகோள்
மாவட்டம் முழுமையும் சிறப்புடன் பணியாற்றிய அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்க  வேண்டும்.

Tuesday 3 April 2018


MNP நிலை மார்ச் 2018

மாவட்டம்
BSNL க்கு
உள்ளே
BSNL க்கு
வெளியே
நிகரம்
+/-
கோவை
108602
1738
106864
கடலூர்
24312
634
23678
குடந்தை
17332
443
16889
தர்மபுரி
26918
950
25968
ஈரோடு
131641
757
130884
காரைக்குடி
10601
388
10213
மதுரை
28014
911
27103
நாகர்கோவில்
29255
852
28403
நீகைரி
2912
246
2666
புதுவை
5444
413
5031
சேலம்
69862
1290
68572
தஞ்சை
23477
388
23089
திருச்சி
70781
679
70102
தூத்துக்குடி
19835
534
19301
நெல்லை
46238
980
45258
விருதுநகர்
7608
655
6953
வேலூர்
10568
1215
9353
மொத்தம்
633400
13073
620327