விசாலினிக்கு வாழ்த்துக்கள்
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி.
11 வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.
அதுவும்
24 மணிநேரத்தில்.
தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர்.
கற்பிக்கவும் தொடங்கினார்.
தன்
11வயதில், 25 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு இறுதி ஆண்டு மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள்,
துறைத் தலைவர்கள், முதல்வர்களுக்கு வகுப்புகளை நடத்தியவர்.
இவரது திறமையை அறிந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான்.
அங்கு உலக அளவிலான
IOB GM தலைமையிலான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்குஅரை மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள்.
ஆனால் விசாலினியோ இரண்டு மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.
தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி,
ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.
ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது
ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.
ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது
HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11.
TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி
11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.
லண்டன் உலக பதிவேடுகள்
பலகலைக் கழகத்தின் தலைவர்
தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.
Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து இரண்டு நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர குறும் படத்தை ஒளிபரப்பியது.
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு,
காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா,
உலகின் 74 மொழிகளில் 174 நாடுகளில்*
விசாலினியின்அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பிகௌரவப் படுத்தியபோது விசாலினிக்கு*
வயது 13 தான்.
வயது 13 தான்.
உங்களுக்குத் தெரியுமா,
சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன்
90 முதல் 110 வரை இருக்கும்.
கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு அறிவுத்திறன் 160. ஆனால் விசாலினியின் அறிவுத்திறன் 225.
உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன்.
தாத்தாவோ வெல்டராக இருந்து,
பின் தமிழாசிரியராக ஆனவர்.
இந்திய நாட்டின் தமிழ்மகள் விசாலினி
இன்னும் பல உலகப் பெர்மைகள் பெற்று மிளிர்ந்திட வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment